Thursday, August 27, 2009

இனிய புதிரின் இனிப்பான விடை...

ரொம்ப சரியா சொன்னிங்க சத்யா அண்ணே....

செல்வி தமிழினி,திருமதி தமிழினி யாக போறேன் வருகிற ஞாயிற்று கிழமை லருந்து...அதாவது .ஆகஸ்ட் 30 ம் தேதி...

திருமணத்திற்கு பின் பெங்களூர் ல இருப்பேன்...

அப்படியே தொடர்ந்து எழுதவும் முயற்சிக்கிறேன் :))))))))))))))

இப்படிக்கு தங்கள் அனைவரின் வாழ்த்துக்களை வேண்டும்....தங்கள் இனிய தமிழினி....

Wednesday, August 26, 2009

ஒரு இனிய புதிர்?????

எல்லாருக்கும் வணக்கம்.....

எப்போதும் கருத்து சொல்லுவேன்...அல்லது விமர்சனம் பண்ணுவேன்....இல்லேனா மொக்கை போடுவேன்....

ஆனால் இந்த முறை கொஞ்சம் புதுசா உங்கள் வாழ்த்துக்களை வேண்டிகிறேன்...எதுக்காக னு எதாவது யூகிக்க முடியுதா?????
யோசிங்க..................

இன்னும் நல்லா...........................

உங்கள் யுகங்களை சொல்லுங்க.....அதுக்கப்புறம் நான் என்ன விவரம் னு சொல்றேன்....

Sunday, March 8, 2009

நண்பர்களே நலமா???

எல்லாருக்கும் வணக்கம்...எல்லாரும் நல்லா இருக்கீங்க னு நினைக்குறேன்...

எல்லாரும் என்னை மன்னிக்கணும்....சரியா 6 மாசத்துக்கு பிறகு பதிவு போடுறேன்...கையில கணினி இல்லாத காரணத்துனால எழுத முடியல....
இந்த 6 மாசத்துல வேலை பளுவும் அதிகம்...

இந்த 6 மாசத்துல நடந்த சில முக்கியமான விஷயங்கள இங்க பகிர்ந்துக்க போறேன்...
1)சரியா அக்டோபர் மாசம்....திடீர் னு ஆபீஸ் ஐடி ல ஒரு மெயில்....பார்த்தா நம்ம வெட்டி அண்ணே...ரொம்ப சந்தோசமா பதில் எழுதுன எனக்கு காத்திருந்தது அடுத்த இன்ப அதிர்ச்சி....வெட்டி அண்ணே என்கிட்டே போன் ல பேசினாங்க....எனக்கு ரெண்டு கையிலயும் ஆஸ்கார் கிடைச்ச சந்தோஷம்...:)))))ரொம்ப நன்றி வெட்டி அண்ணே.... :)))))

2)டிசம்பர் மாசம் ரொம்ப கடினமான மாதமாக இருந்தது....அதிகம் வீட்டுக்கு போக முடியாமல்,வார இறுதிகள் கூட ஆபீஸ் வர வேண்டியதா போச்சு...ஆனா,ஜனவரி லருந்து கொஞ்சம் பரவா இல்லே.. :)

3)ஆறு மாதங்கள்ல நிறைய படம் பார்த்தேன்...நினைவுல நின்ன சில படங்கள் னா "அபியும்,நானும்","செவென் பவுண்ட்ஸ்" மட்டும் தான்...

4)பிப்ரவரி இந்தியா வே கொண்டாட வேண்டிய மாதம்...இசைப்புயலுக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்த மாதம்....எனக்கு என்னவோ நானே விருது வாங்குன மாதிரி அவ்வளவு சந்தோஷம்...அவருக்கு விருது கிடைத்த போது நான் அலுவலகத்தில் இருந்தேன்...அலுவலகத்தில் இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள்....இந்திய திறமைக்கு உலக அங்கீகாரம்...செம சந்தோஷம்...

சரி....மற்றொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் சந்திப்போம்....அது வரை...டேக் கேர்....