Sunday, June 22, 2008

FAQS ஆன் தசாவதாரம்

ஒரு வழியா தசாவதாரம் பார்த்தாச்சு.........

ஜூன் 6 ஆம் தேதியிலிருந்து படம் பார்த்துட்டேன் னு சொன்ன எல்லார்கிட்டயும் நான் கேட்டு கொண்டிருந்த கேள்விகள் சிலவற்றிற்கு இதோ பதில்கள் :

1) படத்துல உண்மையிலேயே 10 வேடங்களா?
ஆமாம்.படத்தில் 10 வேடங்கள் தான்.ஆனால் நம்பி மற்றும் கோவிந்த் வேடங்களுக்கு மேக்கப் அவ்வளவாக தேவைப்படவில்லை...

2) படத்தின் ஹீரோயின் கள் பற்றி...?
மல்லிகா - வில்லனின் மனைவியாக வருகிறார்...அநியாயத்திற்கு கெட்டவராக இருக்கிறார்...
அசின் - வழக்கம் போல துறுதுறு வென்று அசத்துகிறார்...முகுந்தா பாடல் தவிர வேறு பாடல்கள் இல்லை...முக்கியமாக டூயட் இல்லை...தமிழ் சினிமா விதிமுறைகள் உடைக்க பட்டு விட்டன...!!!
3)படத்தின் பாடல்கள்???
ஒ சனம் பாடல் துள்ளலாகவும்,அசத்தலாகவும் இருக்கிறது...
கல்லை மட்டும் பாடல் நிறைய சிந்திக்க வைக்கின்றது...
முகுந்தா பாடல் மோர் ஆப் எ சாமி பாட்டு...ஆனால் மற்ற பாடல்களை விட எனக்கு இந்த பாடல் பிடித்தது....லிரிக்ஸ் வாலி அன்றோ!!!
உலக நாயகன் பாடல் உண்மையாகவே உலக நாயகனுக்கு ஓர் அர்ப்பணம்....

4)படத்தில் வரும் வேடங்கள் பற்றி???
படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது...ஜப்பானீ வேடம் தான்...அழகான கமலை அசிங்கமாக காட்டியிருந்த பூவராகன் வேடமும் அருமை...கிருஷ்ணவேணி பாட்டி வேடமும் கமல் என்று நம்ப முடியவில்லை...பிலேட்சேர் கண்களை வைத்து கமல் என்று கண்டுகொள்ள முடிந்தது...புஷ் நடை சூப்பர்....அந்த முஸ்லீம் வாலிபனாக வரும் கமலுக்கு உயரத்தை எப்படி அதிகமாகினார்கள் என்று சொன்னால் நல்ல இருக்கும்...பலராம் வேடம் பாலைய்யாவை நினைவு படுத்தியது...ரெங்கராஜ நம்பி வேடம் கம்பிரமாக இருந்தது...அவதார் சிங் வேடத்தில் கலக்கலாக சிங் போலவே இருக்கிறார்...கோவிந்த் வேடத்திற்கு தான் அதிகமாக கஷ்ட பட்டிருக்க வேண்டும்!!..அனைத்து கேரக்டேர் களும் அருமை.....படத்தை கமலுக்காகவே ரெண்டு மூணு தடவை பார்க்கலாம்...

5)படம் புரியுதா???
ஒ...நல்லாவே புரியுதே...chaos theory,butterfly effect எல்லாம் சொல்லியிருக்கார்...ஆனாலும்..படம் புரியுது....

6)so,படம் சூப்பர் ஹிட் தானா??? :)))))))))))))
ஹிம்ம்ம்ம்ம்...கண்டிப்பா....சுப்பர்ரோ சூப்பர் ஹிட்.....சந்தேகமே வேண்டாம்....

இதனால் சகலமானவர்களுக்கும் நான் தெரிவித்துகொள்வது என்னெவென்றால்.....தயவு செஞ்சு இந்த படத்த பாத்துருங்க.....ப்ளீஸ்....
:))))))))))

Wednesday, June 18, 2008

குட் சாட்அவார்ட் ...


ஆபீஸ் வந்ததும் ப்ளாக் ஐ பார்த்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது....

இல்லதரசியிடமிருந்தது ஒரு அவார்ட் வந்திருந்தது...

குட் சாட்அவார்ட் ...

மிக்க நன்றி இல்லத்தரசி...

இனி நான் இந்த அவார்டை வேறு முன்று பிளாக்கர்களுக்கு கொடுக்க வேண்டுமாம்...

சரி,கொடுத்துடுவோம்!!!!

முதல் அவார்ட் கோஸ் டு இல்லத்தரசி....நல்ல சமையல் மேனுகளை ப்ளாகில் போட்டோவுடன் போட்டு அசத்திவருவதால் என் போன்ற பலரும் அதை பார்த்தே பசி மறக்க உதவுவதால் இந்த அவார்ட்!!!

செகண்ட் அவார்ட் கோஸ் டு சு ஹிஸ் ப்ரைன்வவேஸ்...தன் மகனை பற்றி அழகாகவும்,சுவாரஸ்யமாகவும் எழுதி வருவதால் இந்த அவார்ட்!!!

மூன்றாவது அவார்ட்....நான் ப்ளாக் தொடங்கிய நாள் முதலே என் ப்ளாக் குகளை தவறாமல் படிக்கும் அன்பு அண்ணன் வடக்குபட்டு ராமசாமிக்கு....(என்ன சத்யா ....ஓகே தான??)...

இந்தாங்க உங்க அவார்ட்...எடுத்துக்குங்க.. :))))))))))))))))





Tuesday, June 17, 2008

வீக் என்ட்

"so wats up for the weekend?"

நீங்க ஐ.டி துறையில வேலை பார்ப்பவராக இருந்தால் வெள்ளி கிழமைகளில் இந்த கேள்வியிலிருந்து நீங்க தப்பவே முடியாது...

போன வாரம் ஊருக்கு போகும்போது ரயிலில் என் உடன் பயணம் செய்த இரு பெரியவர்கள் பேசிகொண்டிருந்தது என்னை ரொம்பவே யோசிக்க வைத்தது...

நான் ஐ.டி யில் வேலை பார்ப்பவள் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை போலும்...ஐ.டி யில் வேலை செய்யும் மக்கள் எல்லோரையும் சகட்டு மேனிக்கு வாரிகொண்டிருந்தார்கள்.....எனக்கே கொஞ்சம் சங்கடமாக தான் இருந்தது....

வெள்ளி கிழமை கேளிக்கைகள் என்கிற பெயரில் நம்மில் சிலர் செய்யும் தவறால் இந்த துறையில் இருக்கும் அனைவர் மீதும் பொத்தாம் போக்காக குறை சொல்வது சரியல்ல....

உதாரணத்திற்கு,என் நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள்...இந்தியாவில் பெரிதும் மதிக்க படும் ஒரு சாப்ட்வேர் நிறுவனம்....எங்கள் நிறுவனத்தில் சேவை மனம் கொண்டவர்களுக்காக ஒரு தனி இயக்கம் அமைக்க பட்டு நிறைய உதவிகள் செய்து வருகின்றனர்...அது மட்டுமல்லாது,பணியாளர்கள் ஆன நாங்களும் எங்களுக்குள் குழுக்கள் அமைத்து சேவை மனதுடன் செயல்பட்டு வருகிறோம் ... இது போன்ற நல்ல காரியங்களை செய்ய நாங்கள் எங்களது வார இறுதிகளை பயன்படுத்தி கொள்கிறோம்...போன வாரம் கூட ஓர் ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று வந்தோம்....இந்த துறையிலும் சில நல்லெண்ணம் கொண்டவர்கள் இருக்கிறோம் என்பதை இவர்கள் அறிவார்களா??

மிகவும் சிறிய வயதிலேயே இவர்களுக்கு இவ்வளவு சம்பளம்!!ஆதலால் தான் கண்முன் தெரியாமல் ஆடுகிறார்கள் என்று கூறும் இவர்களால்,இந்த துறையில் இருப்பவர்களின் மன உளைச்சலை உணர முடியுமா என்பது ஒரு கேள்வி குறியே!!!

எங்களில் சிலர் செய்யும் தவறுக்காக எல்லாரையும் குறை கூறுவது தவறான விஷயம்....

சாப்ட்வேர் நிறுவனத்தில் இருக்கும் பலரும் வெளியூரில் இருந்து வந்து வேலை பார்ப்பவர்கள் தான்...அப்படி இருக்கறப்போ வார இறுதிகளில் எல்லாம் ஊருக்கு போகவே விரும்புகிறோம்...அதுவும் என்னெல்லாம் பார்த்திங்கன்னா ஒரு நாளைக்கு 11 மணி நேரம் அலுவலகத்தில் இருக்கேன்...அப்படி இருக்குறப்போ வார இறுதி ல தான் நமக்காக கொஞ்ச நேரம் எடுத்துகிட்டு நமக்கு பிடிச்ச விஷயங்கள் செய்ய முடியும்...உதாரணத்துக்கு பிடித்த புத்தகங்கள் படிக்கிறது,பாடல்கள் கேட்குறது,கோவில்களுக்கு செல்வது மாதிரி ஏதாவது...மனசுக்கு சந்தோஷம் தரக்கூடிய விஷயங்கள்...

இதெல்லாம் மறந்துட்டு சும்மா அர்த்தமில்லாம எல்லாரையும் குறை கூறுவது சரியல்ல....

இனிமே, "ஐ.டி பசங்க ரொம்ப மோசம்ப்பா" னு சொல்றதுக்கு முன்னாடி நீங்க என்ன பண்றிங்க வார இறுதிகள்ள கொஞ்சம் யோசிச்சு பார்த்துக்குங்க.....!!

Monday, June 9, 2008

கோபம் கொள்ளாதே...

இந்த கோபம் இருக்கே...ஐயோ...மனுசன உண்டு இல்ல னு ஆக்கிடும்..
எல்லாருக்கும் கோபம் ங்கறது தவிர்க்க முடியாதது...ஆனா அது அர்த்தமுள்ளதா இருக்குறது அவசியம்..அது யாருமேல,எப்போ,எதுக்காக வருதுங்க்றதும் முக்கியம்...
சரி,முதல்ல நாம ஏன் கொபிச்சுகுறோம் னு யோசிங்க?!கோபம் என்பது முக்கால்வாசி நேரம் நாம் எதிர்பார்த்தது,எதிர்பார்த்த விதத்தில் நடைபெறாமல் போவதால் ஏற்படுவது....ஒரு சின்ன மாறுதலுக்கு எதிர்பார்ப்பே இல்லாமல் இருந்து பாருங்களேன்..அதே போல ஒரு காரியமோ,விஷயமோ 100 சதவிகிதம் சரியாக இருக்கணும் னு நினைக்குறதும்,கோபத்தை ஏற்படுத்தும்...இது போன்றவர்களை ஆங்கிலத்தில் "Perfectionist" என்று சொல்லுவோம்...இவர்கள் எப்போதும் ஒரு பரபரப்புடன் இருப்பதை நம்மால் உணர முடியும்...இது அவர்களை மட்டுமல்லாது அவர்களை சுற்றி இருப்பவர்களையும் வெகுவாக பாதிக்கிறது..
சரி,கோபத்தை கட்டுப்படுத்த சில வழிகள்...
1) மிகவும் கோபமாக இருக்கும் போது,சுற்றி இருப்பவர்களிடம் பேசாமலிருப்பது உத்தமம்..மிறி பேசினால் வம்பு தான்...
2)கோபமாக இருக்கும்போது தனிமையில் இருப்பதை தவிர்க்கவும்...
3)உங்களுக்கு பிடித்த நல்ல இசை கேட்கலாம்....அவை மெல்லிசையாக இருத்தல் நலம்!!
4)புகைபிடிப்பதோ,மது அருந்துவதோ கோபத்தை தீர்க்காது.....
5)கோபம் சற்று குறைந்த வுடன்,பிடித்தமானவர்களுக்கோ,நெருக்கமானவர்களுக்கோ போன் போட்டு பேசலாம்...அவர்களிடம் உங்களுக்கு செவி சாய்க்கும் அளவுக்கு நேரம் இருக்கிறதா என்பதை முதலில் யோசித்து கொள்ளுங்கள்...
6)எந்த ஒரு காரியத்திலும் நீங்கள் முழு மனதுடன் உவந்து செய்தாலே போதும்...இது கண்டிப்பா நடந்து விட வேண்டும் என்று எண்ணுவது தவறல்ல...ஆனால் அதுவே உங்கள் நிம்மதியை குலைத்துவிட கூடாது!!
7)பொதுவாகவே உணவில் அதிக காரம்,உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும்...
8)நிறைய பழங்கள் சாப்பிடுவதை வாடிக்கை ஆக்கி கொள்ளுங்கள்..
9)எப்போதும் ஆரோக்கியமான சிந்தனைகளை வைத்து கொள்ளுங்கள்...
10)தியானம் செய்ய பழகுங்கள்!!
()

Friday, June 6, 2008

தடங்கலுக்கு வருந்துகிறேன் ...

வேலையில ஏற்பட்ட சில மாறுதல் களால் தமிழினி மைசூர் வரவேண்டியதா போயிடுச்சு...சொந்த கணினியும் கையில் இல்லை..வேலை பழுவும் கொஞ்சம் அதிகம்...
ஆதலால் ஒரு சிறிய இடைவேளை வந்து விட்டது..
தடங்கலுக்கு வருந்துகிறேன்...
ஆனால் இனி மீண்டும் என் எண்ணங்கள் இங்கு எழுத்தாக உரு பெறும்...
பில்லா போல் சொல்ல வேண்டுமானால் "I AM BACK"..
விரைவில் பதிவுகளுடன் உங்களை சந்திக்கிறேன் ....

:)))