Monday, September 8, 2008

மீ..மீ...

உன்னை பத்தி நறுக்கு ன்னு 7 விஷயம் சொல்லு பார்போம் னு சவால் விட்ருக்காங்க இல்லத்தரசி யும் ,சுகன்யா வும்...விடுவோமா....நாங்கெல்லாம் யாரு....(ஆமாமா?! அப்டின்னு சலிச்சுகுறது காதுல கேட்குது.... :)))

இனி என்னை பத்தி 7 விவரங்கள்...

1)பிறந்தது என்னவோ சென்னை னாலும் வளர்ந்தது...படிச்சது எல்லாமே திருச்சிராபள்ளி ல தான்....அப்புறம் மறுபடி கொஞ்ச நாள் சென்னை வாசம்....எல்லாம் பொட்டி தட்றதுக்கு தான்...அப்புறம் "நீ சென்னை ல பொட்டி தட்னது போதும்...மைசூர் க்கு போ னு அனுப்பி வச்சுட்டாங்க...ம்ம்ம்..."

2)படிச்சது கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்....

3)கிட்டத்தட்ட மூணு வருஷமா பொட்டி தட்டிட்டு இருக்கேன் ... :)))

4)பொழுது போக்கு...அது நேரத்துக்கு தகுந்த மாதிரி மாறும்...சில சமயம் புத்தகங்கள் படிக்கறது...பாடல்கள் கேட்குறது(முக்கால்வாசி இதான் செய்வேன்..),பதிவு எழுதுறது,வரையுறது (பிக்காசா அளவுக்கு இல்லேனாலும் ஏதோ சுமாரா வரைவேன்...),அப்பா-அம்மா கிட்ட போன்ல மொக்கை போடுறது...(மிக பெரிய பொறுமை சாலிகள்...)

5)பிடித்தவை : அம்மா மடியில படுத்து தூங்கறது,அப்பா கிட்ட நேரம் காலம் பார்க்காம உலகத்துல உள்ள எல்லா விஷயங்களையும் பத்தியும் பேசுறது ,மழை,என் பதிவுக்கு நீங்க போடுற பின்னுட்டங்களை படிக்கறது,குழந்தையின் புன்சிரிப்பு,வலைத்தளத்துல நேரம் காலம் தெரியாம எதப்பத்தியாவது படிக்கறது,அம்மாவோட சமையல்,அப்பாவோட செல்ல கோபம்,மலைக்கோட்டை உச்சி பிள்ளையார்,தான்தோன்றி கோயில் சிவா பெருமான்,எப்போதாவது போனில் கேட்கும் நண்பர்களின் குறள்:) ,அக்கா குழந்தைகளின் மழலை பேச்சு,திருச்சி வீடு,வீட்டு வாசலில் இருக்கும் துளசி மாடம்,மழைக்கு பின் வரும் மண் வாசம்,சிரிப்பவர்களின் கண்களின் ஓரத்தில் வரும் சுருக்கம்,நண்பர்களின் செல்ல அதட்டல்,மோதிரங்கள்,நீளமான காதணிகள்,மருதாணி,கரடி பொம்மைகள்,என் க்யுபுல இருக்கற சின்ன பிள்ளையார் பொம்மை.....இப்படி இந்த லிஸ்ட் ரொம்ப பெருசு......!!! (ஸ்ஸ்ஸ்ஸ்...கண்ணு கட்டுது...:))))

7)நான் எப்படி னு நானே சொல்றது அவ்வளவு நல்ல இருக்காது...என்னே பொறுத்த வரைக்கும் யாருக்கும் பெருசா உதவ முடியலைன்னாலும்,தொந்தரவு கொடுக்காம இருந்தா,அதுவே போதும்....மத்தப்படி ரொம்ப சுலபமா எல்லார்கிட்டயும் பழகுவேன்...முடிஞ்சா என்ன சுற்றி இருக்குறவங்கள சிரிக்க வச்சுட்டு இருப்பேன் (அப்போ தானே நானும் சிரிச்சுட்டே இருக்க முடியும்....)

சரி,இனி யார மாட்டி விடலாம்...?!

1)சத்யா அண்ணன்

2)ரம்யா ரமணி

3)ஜி

4)சரவணா குமார்

மக்கா,எல்லாரும் சீக்கிரமா வந்து எழுதுங்கப்பா.... :))))))

Monday, September 1, 2008

தமிழினிக்கு இன்றோடு ஒரு வயது......



வலை பூவில் எழுத தொடங்கி 1 வருடம் முடிந்து விட்டது...ஆதலால்,இன்றோடு என் வலை பூவுக்கு ஒரு வயது முடிந்து விட்டது..
சென்னையில் இருந்த போது எழுத தொடங்கினேன்..சத்யா அண்ணனை தவிர பதிவர்கள் யாரும் என் வலைப்பூவை படித்ததாக நினைவில்லை...ஆனால்,என் உடன் பணியாற்றிய நண்பர்கள் சிலர் எனக்கு அருகிலேயே உட்கார்ந்து கொண்டு என் வலைப்பூவை படித்து தங்கள் கருத்துக்களை கூறியதுண்டு.. :)

தொடக்கத்தில் எதை பற்றி எழுதுவது என்று நிறைய சந்தேகங்கள் வரும்..
எழுத ஆரம்பித்து பாதியிலேயே நிறுத்திய பதிவுகள் நிறைய...!

இப்போதெல்லாம் சரளமாக எழுத வருகிறது...சந்தேகங்களையும் கடந்து... :)

எழுதுவது மிகவும் பிடித்திருக்கிறது..தொடர்ந்து எழுதவே விளைகிறேன்...எழுதுவேன்... :))))))

பதிவுகள் எழுதுவதை ஒரு பொழுது போக்காக கருதாமல்,விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் ஒரு தளமாக கருதுகிறேன்..எழுத்துக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதில் எனக்கு என்றுமே மாற்று கருத்து இருந்ததில்லை..

சிந்தனை செய் மனமே-பதிவுகள் தாம் நான் எழுதியதில் எனக்கு பிடித்தது... :)

(நான் எழுதியதில் உங்களுக்கு பிடித்த பதிவுகள் என்னென்ன என்பதை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்...)

இந்த தருணத்தில் நான் சிலருக்கு நன்றி கூற கடமை பட்டுருக்கிறேன்...

என் வலைப்பூவின் முதல் ரசிகர்களான என் சென்னை நண்பர்கள்,தமிழ் மணத்தில் என் பதிவுகளை சேர்க்க எனக்கு உதவிய சத்யா அண்ணன்,என் பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் என் பதிவர் நண்பர்கள்,நான் இந்த வலை பூவை ஆரம்பிக்க எனக்கு ஊக்கம் தந்த என் தோழிகள்,எப்போதும் என் பதிவுகளை முதலில் படிக்கும் என் பெற்றோர்,எனக்கு தமிழில் ஆர்வம் வர காரணமாயிருந்த என் தமிழ் ஆசிரியைகள் அனைவருக்கும் நான் நன்றி கூறி கொள்கிறேன்...

என்றும் என் எழுத்துக்களை படித்து உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்...இது போல இன்னும் பல வருடங்கள் கடந்தும் நான் எழுதுவதற்கு எனக்கு ஊக்கம் தாருங்கள்.... :)))))

Thursday, August 28, 2008

உள்ளேன் அய்யா....

பதிவு போட்டு இன்னியோட சரியா ஒரு மாசம் ஆச்சு...என்ன நீ உயிரோட தான் இருக்கியான்னு அப்பப்ப கேட்டுகிட்டு இருந்த பதிவர்கள் அனைவருக்கும் நன்றி...(ஜி,சரவணகுமார்,சுகன்யா)....

ஒரு development ப்ராஜெக்ட் ல வேலை பார்க்க வேண்டி வந்ததால எழுத முடியல...மேட்டர் என்னன்னா இன்னும் அந்த ப்ராஜெக்ட் ரெண்டு மாசமாவது போகும்... :((

இந்த ஒரு மாசத்துல நிறைய கத்துக்க முடிஞ்சுது...அதுல ஒரு சந்தோஷம்..

அதிகம் ஊருக்கு கூட போக முடியாம போனது ஒரு வருத்தம்....

ஆனா,உங்க எல்லாருடைய பதிவையும் படிச்சுகிட்டு தான் இருக்கேன்...

(முக்கியமா,வெட்டி அண்ணனோட ஆடு புலி ஆட்டம் கதைகள்... :)))

ரைட்டு...எல்லாரும் நல்ல புள்ளைங்களா பதிவுகள் போட்டுக்கிட்டு இருங்க...koodiya சீக்கிரம் நானும் ஒரு உருப்படியான பதிவோட உங்களை சந்திக்கிறேன்...

ஹ........வர்ர்ர்ர்ட்டா..... :)))

Tuesday, July 29, 2008

அவார்ட்ஸ்-2

இல்லத்தரசியிடமிருந்து இன்னொரு அவார்ட்...இந்த முறை "Blogging Friends Forever Award"....மிக்க நன்றி இல்லத்தரசி....உங்க அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போறேன் னு தெரியல....ரொம்ப,ரொம்ப நன்றி வாணி.....


அடுத்து இன்னொரு பொறுப்பையும் என்னிடம் கொடுத்துருக்காங்க,விதிமுறைகளோட...அந்த விதிமுறைகள் என்னென்ன...அப்படின்னா..

1)நான் இந்த அவார்டை 5 பேருக்கு கொடுக்கணும்.

2)இந்த 5 பேருல 4 பேரு நம்ம ப்ளாகை தொடர்ந்து படிக்கிறவங்களா இருக்கணும்...ஒருத்தர் நம்ம ப்ளாகை புதுசா படிக்க தொடங்கினவங்களா இருக்கணும்...

3)இந்த அவார்ட் உங்களுக்கு யாரு கொடுத்தாங்களோ அவங்களுக்கு மறுபடியும் ஒரு link தரனும்......


இப்போ என் turn....சரி,யார்யாருக்கெல்லாம் இந்த அவார்ட் னு பாருங்க...





மற்றும்

5)சரவண குமார்(கவிதைகள் எனப்படும்...)(இவர் என் பதிவுகளை புதிதாக படிக்க தொடங்கி இருக்கிறார்...)



உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....


இந்த அவார்ட் எனக்கு கொடுத்த இல்லத்தரசிக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறி கொள்கிறேன்...

Friday, July 25, 2008

சிந்தனை செய் மனமே-2 : அப்டேட்

என் தோழி அவளது வீட்டில் பேசியிருக்கிறாள்.அவளது பெற்றோரும் அவளுக்கு இந்த வரனில் விருப்பமில்லை என்பதை புரிந்து கொண்டு,மாப்பிள்ளை வீட்டில் எடுத்து சொல்லிவிட்டனராம்...

இதற்கிடையில்,அந்த தோழிக்கு வந்த வேறொரு வரனின் ஜாதகம் ஒத்து போக அந்த வரனையே அவளுக்கு பேசி முடித்து விட்டனர்...ஒரு நல்ல விஷயம் என்னவென்றால்,இந்த முறை வரதட்சணையை பற்றியே பேச்சே வரவில்லையாம்....என் தோழியும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள்...

என் உயிர் தோழிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......

Friday, July 18, 2008

சிந்தனை செய் மனமே -2


பர பர னு வேலை பார்த்துகிட்டு இருந்த ஒரு செவ்வாய் கிழமை காலையில் அந்த கல்லூரி தோழியிடமிருந்து போன் வந்தது...பேசி கொஞ்ச காலம் ஆகியிருந்த காரணத்தால்,க்யுபை விட்டு வெளியே சென்று மீண்டும் அவளது செல்லுக்கு போன் செய்தேன்...



"ஹே....சொல்லு ....எப்படி இருக்க...??"..இது நான்..



"நல்லா இருக்கேன்...போன எடுக்கலனதும் பிசியா இருக்க னு நெனச்சேன்....என்னடி டிஸ்டப் பண்ணிடனோ??.."...வழக்கமா அவ கேட்குற கேள்வி தான் இது...



"ஏய்..அதெல்லாம் பரவா இல்லே...சொல்லு..."...பிசியா இருக்குறதா பொதுவா யார்கிட்டயும் சொல்றதில்லே....



"ஹ்ம்ம்...ஏய் எனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணிருக்காங்க வீட்டுல..."...சொல்லும் போது கூட குரலில் சந்தோஷமே இல்லாமலிருந்தது,எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது ....



"ஏய்...காங்கிராட்ஸ்"...நம்ம கடமையை ஒழுங்கா செய்வோமே....



"அட நீ வேற டி..."..ரொம்பவே அலுத்துகிட்டா..



"......." எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில...



"எனக்கு என்ன கொறச்சல் னு நீ நினைக்குற.."....கொஞ்சம் உணர்ச்சிவச பட்டு பேசுறா னு மட்டும் தெளிவா புரிஞ்சது...



"ஏய்...என்னாச்சு..ஒரு நல்ல விஷயம் சொல்லிட்டு இப்படி என்னைய போட்டு குழப்புற...என்ன தான்னு கொஞ்சம் தெளிவா சொல்லுடி..."...செய்து கொண்டிருந்த scripting மெல்ல மெல்ல submind க்கு transfer வாங்கிக்கொண்டு போனது...இப்போது என் தோழி மட்டுமே என் நினைவில் இருந்தாள்...இவள எப்படி சமாதான படுத்தறது னு மட்டுமே மூளைக்குள் யோசனை ஓடிகொண்டிருந்தது...



"மாப்பிள்ளை வீட்டில் 200 பவுன் நகையும்,5 லகரம் ரொக்கமும் வாங்கிகிட்டு தான் என்னைய ஒத்துக்கிட்டாங்க..."...சொல்லும் போது குரலில் அத்தனை கோபம்...



"இது தான் உங்க caste ல சகஜம் ஆன விஷயமாச்சே...நீ தான் காலேஜ் டேஸ் லையே சொல்லுவியே..." ...பழசை அசைப்போட்டு அவளை சமாதான படுத்த விளைந்தேன்....



"இருந்தாலும் 5 லட்சம் ரொம்ப அதிகம் தான டி..."...இந்த கேள்விக்கு நான் என்ன சொல்லுறது..



"அதிகம் மாதிரி தான் டி தெரியுது..."..அந்நியன் பட சொக்கன் மாதிரி பதில் சொன்னேன்...


"....இதுல நான் வாழ்க்கை பூரா வேலைக்கு போய்க்கிட்டே வேற இருக்கனுமாம்..."...


அவள் சொல்ல சொல்ல எனக்கே கோபம் வந்தது...


"நிச்சயம் முடிஞ்சுருச்சா..???" கொஞ்சம் கடுப்பாக தான் கேட்டேன்...


"இல்ல ...இல்ல...நிறுத்திடவா???"...பொண்ணு செம சீரியஸா என்கிட்டே கேட்டா....



"இல்ல...இல்ல..கொஞ்சம் பொறுமையா இரு...உங்க அப்பா,அம்மா கிட்ட பேசு...அவங்க கிட்ட உன் மனசுல தோணுறத சொல்லி...புரிய வைக்க ட்ரை பண்ணு..."..நான் அவளுடைய நிலையில் இருந்தால் என்ன செய்வேனோ,அதையே அவளுக்கு அறிவுறுத்தி...உடனே ஊருக்கு போக சொன்னேன்...



அவளும் அப்படியே செய்வதாக சொல்லி...போனை வைத்தாள்....
இப்படி எத்தன பேர் என்கிட்டே பொலம்பி இருக்காங்க னு நான் சொன்னா உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும்...

நான் எல்லாரையும் குறை சொல்லல....நல்லவங்களும் இருக்காங்க..ஆனா,மெஜாரிட்டி ஆளுங்க நான் சொல்ற மன நிலையோட தான் இருக்காங்க....



இதெல்லாம் கூட பரவா இல்லே...எங்க குழந்தை பெத்துகிட்டா மனைவி வேலைக்கு போக மாட்டாளோ னு பயப்படுற ஆளுகளும் இருக்காங்க னு நான் சொன்னா நீங்க நம்புவீங்களா???ஆனா இது உண்மை......எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுடைய வாழ்க்கையில இப்ப இதான் நடந்துக்கிட்டு இருக்கு...



இத தட்டி கேட்க பெண்ணுடைய பெற்றோர் போனாங்கன்னா,"பொண்ண பெத்தவங்க தானே...பொறுமையா இருக்க வேண்டியதானே..."...னு சொல்ல வேண்டியது...இந்த மாதிரி பேசுறவங்கள நான் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புறேன்...."உங்க பையன விட அந்த பொண்ணு எந்த விதத்துல குறைச்சல்???...."...சொல்ல போனா நீங்க பையன வளர்க்க என்ன கஷ்ட பட்டிங்களோ,அது போல பத்து மடங்கு கஷ்ட பட்டவங்க ஒரு பொண்ண பெத்தவங்க.....தயவு செஞ்சு இனிமே பொண்ண பெத்தவங்க தானே னு ஏளனமா நினைக்காதிங்க...அவங்க நினைச்சா உங்க குடும்பத்தையே புரட்டி போட முடியும்...



வரதட்சணை வாங்கிகிட்டு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டா,அந்த பொண்ணு உங்களை எப்படி மதிப்பா???...ஒரு விலை கொடுத்து உங்களை வாங்கிட்ட மாதிரி தான நினைப்பா???



"நான் வாங்கல வரதட்சணை...என் அப்பா,அம்மா கேட்குறதுக்கு நான் என்ன செய்ய முடியும்?" னு கேட்குறாங்க....கல்யாணம் நீங்க தான செஞ்சுக்க போறீங்க??அப்படின்னா வரதட்சணை வாங்காதிங்க னும் நீங்க தான சொல்லணும்...



கரும்பு தின்ன கூலி மாதிரி,கல்யாணம் பண்ணி உங்க கூட கூட்டிட்டு வர்ற பொண்ணுக்கிட்ட வரதட்சணை ன்ற பேருல உங்களுக்கு நீங்களே ஒரு விலை போட்டு வாங்கிட்டு, தயவு செஞ்சு அந்த பொண்ணு உங்களை மதிக்கணும் னு மட்டும் எதிர்பார்க்காதிங்க....!!!


"தன்மானம் உள்ள எந்த ஆண் மகனும் வரதட்சணை வாங்க மாட்டான்" என்பது என் கருத்து....

Tuesday, July 15, 2008

நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில்...



இந்த சென்னை விமான நிலையம் இருக்கே...அதுக்கு ஓய்வே கிடையாது...

எப்போதும் ரொம்ப பிசியா இருக்கும்...

நம்ம விமான நிலையங்கள் எப்போதும் ஒரு உணர்ச்சி குவியலாதான் இருக்கும்...

சந்தோஷம்,பிரிவின் சோகம்,பொறாமை,கூச்சம்,பயம் இப்படி சகல உணர்ச்சிகளையும் மாறி மாறி நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடும் இந்த விமான நிலையங்கள்...போன முறை போனபோது நான் கண்ட சில காட்சிகளை இங்கே பதியலாம் என உத்தேசம்...


1)நான் சென்ற உடனே கவனித்தது இந்த பெண்ணை தான்..இளைய 20 களில் இருக்கும் அந்த பெண் onsite செல்கிறார் போல...அவரது மொத்த குடும்பமே வந்திருந்தது....எங்கிருந்தோ கொஞ்சம் தாமதமாக வந்து சேர்ந்த அவருடைய மாமா அவள் கையில் ஒரு தாயத்தை கட்டி விட்டார்....அந்த பெண் அதை மறுக்காமல் சிரித்த முகத்துடன் அதை கட்டி கொண்டது,எனக்கு மிகவும் பிடித்திருந்தது..."பசியோட இருக்காதம்மா ...காப்பி தண்ணி வாங்கி குடிச்சுக்கணும்....தெரியுதா புள்ளை"....என்று சொல்லி கொண்டிருந்த தன் தாயை ஆனந்த கண்ணீரோடு அவர் பார்த்து கொண்டிருந்ததை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை..... :))


2)இந்த குடும்பம் எனக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தனர்...அவர்களது மகள் தன் 2 வயது குழந்தையை விட்டுவிட்டு செல்ல போகிறார் என்பதை அந்த அம்மா என் அம்மாவிடம் சொல்லி கொண்டிருந்தார்....அதற்குள் அவர்களது மகள் bag checkin முடித்துவிட்டு வந்திருந்தார்...பின் அந்த மகள் தன் குழந்தையை விட்டு பிரிந்துபோக முடியாமல் வெடித்து அழுதார்...பின் அவரை ஒருவாரி தேற்றி அனுப்பிவைக்க என் அம்மாவும் உதவி செய்தார்கள்...


3)ஏர்போர்ட் ல் நடந்து கொண்டிருந்த இந்த எல்லா நிகழ்ச்சிகளையும் என் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வெளிநாட்டு பெண் வீடியோ எடுத்துகொண்டிருந்தார்...


4)புதிதாக திருமணமான இந்த ஜோடியை அங்கிருந்த அனைவருமே கவனித்து கொண்டிருந்தார்கள்....இதிலும் அந்த பெண் தான் செல்ல போகிறார் போல...அங்கிருந்த கூட்டத்தையும் பொருட் படுத்தாமல்....இவர்கள் இருவரும் அவ்வப்போது கட்டியணைத்து முத்தமிட்டு கொண்டிருந்தனர்....இதை பார்த்த இரண்டு வானரங்கள்...."டேய் ...அங்க பார்த்தியா...technology has improved very much" என்று காமெடி செய்துகொண்டிருந்தனர்... :)))


இது எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த நான் எனக்குள்ளே சொல்லி கொண்டது இதுதான்....


"தமிழ் ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை .......பிரிவு தான்....."


ஆனா,என்ன தான் சொல்லுங்க....நம்ம மக்களோட பாசத்துக்கு அளவே கிடையாது....இதை நான் விமான நிலையத்தில் பார்த்த ஒவ்வொரு காட்சியும் நினைவு படுத்தி கொண்டிருந்தது... :))))))))

Thursday, July 3, 2008

அவார்ட்ஸ்

நேற்று சாயுங்காலம் ஆறரை மணிபோல,ஆபீஸ் ல புடுங்குனது எல்லாமே தேவை இல்லாத ஆணி தான் னு onsite கு மெயில் பண்ணிட்டு,வலைப்புவ திறந்தா சுகன்யா அவார்ட்கொடுத்துருந்தாங்க..Friendship award....


மிக்க நன்றி சுகன்யா....இதோட எனக்கு நீங்க எனக்கு ரெண்டு அவார்ட் கொடுத்துடிங்க......ரொம்ப தேங்க்ஸ்....இதே அவார்ட் இல்லத்தரசியும் எனக்கு கொடுத்துருக்காங்க....அவங்களுக்கும் பெரிய தேங்க்ஸ்....எல்லாத்தையும் விட ஒரு paragraph போட்டு பாராட்டிடிங்க.....ரொம்ப தாங்க்ஸ்...

சரி,நம்ம இப்ப இத யாருக்கு கொடுக்கலாம் னு ரொம்ப யோசிச்சதுல,என் நினைவுக்கு வந்த முதல் பதிவர்.....வேற யாரு....நம்ம சத்யா தான்...வடக்குபட்டு ராமசாமி க்கு தான் முதல்ல இந்த Friendship award....


இந்த அவார்ட்க்கு அடுத்த நோமினீ யாரு னு பார்த்திங்கன்னா......இல்லத்தரசி....ரொம்ப creative ஆ இருக்காங்க....ரொம்ப நல்ல சமைப்பாங்க னு நினைக்குறேன்...(சத்யா அண்ணன்தான் பதில் சொல்லணும்....)


சரி,ரெண்டு பெரும் ஜோடி போட்டு வந்து அவார்ட் எடுத்துட்டு போங்க.........வாங்க...வாங்க....


அடுத்த அவார்ட் Blogging With a Purpose award...இத எனக்கு கொடுத்தவங்க,இல்லத்தரசி....ரொம்ப தேங்க்ஸ் வாணி...

முதல்ல இந்த அவார்ட் யாருக்கு கொடுக்கலாம் னு யோசிச்சதுல என் நியாபகத்துக்கு வந்தது மூன்று பேரு.....இல்லத்தரசி யும்,வெட்டிபயலும்,சுகன்யாவும் ...


இல்லத்தரசி யோட இன்னொரு ப்ளாக் creationsss.அழகான பொம்மைகள் எப்படி செய்யறது னு ரொம்ப நல்ல காட்டியிருந்தாங்க....அந்த creativity கு தான் இந்த அவார்ட்....


நான் ப்ளாக் எழுத ஆரம்பிச்சதே...வெட்டிப்பயல் ப்ளாக் பார்த்து தான்....நிறைய உபயோகமான பதிவுகள் இருக்கும் அவரோட வலை தளத்துல....software Engineer ஆகலாம் வாங்க னு அவர் எழுதுன பதிவு எனக்கு ரொம்ப உபயோகமா இருந்தது....ஆதலால் அவருக்கும் மரியாதை நிமித்தமாக இந்த அவார்ட்....


மூன்றாவத நம்ம சுகன்யா....அவங்க ப்ளாகோட அமைப்பே ரொம்ப நல்லா இருக்கும்...அவங்களோட முதல் எழுத்துலயே அவளவு நிறைய அன்னோன்யம்... ரொம்ப நாள் பழகுன தோழி போல உணர்ந்தேன்....அதுனால அவங்களுக்கும் இந்த அவார்ட் தர விரும்புறேன்....


இந்தாங்க உங்க அவார்ட்......


லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட்..என் அன்பு அண்ணன் வடக்குபட்டு ராமசாமி...எனக்கு வலையுலகத்துல கிடைத்த முதல் நண்பர்....அவருக்கும் இந்த blogging with a Purpose award அன்புடன் சமர்ப்பணம்...

Wednesday, July 2, 2008

சிந்தனை செய் மனமே - 1

மைசூர் வந்த பின் ஆபிஸ் காண்டீனில் சாப்பிடுவது வாடிக்கை ஆகி விட்டது...பொதுவாக என் அலுவலகத்தில் சாப்பிட்டு முடித்தபின் நாம் சாப்பிட தட்டை நாம கொண்டு போய் ஒரு தனியான இடத்தில் போட வேண்டும்...அந்த இடத்தில் பொதுவாக ஒரு வாசக பலகை இருக்கும்...அதில் "Think of the thousands who struggle for a single square meal before you waste your food " என்று எழுத பட்டிருக்கும்..நான் தினமும் என் தட்டை கொண்டு போடும் போதும் அதை ஒரு முறை படித்து பார்ப்பேன்...


என்னிடமும் என் குடும்பத்தினரிடமும் ஒரு பழக்கம் உண்டு....அதை நல்ல பழக்கம் என்று சொல்வது இன்னும் சரியாக இருக்கும்...உணவு உண்ண தொடங்கும் முன் கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உண்ணுவது...அதே போல் தட்டில் உங்களுக்கென வைக்க பட்டிருக்கும் உணவை வீணாக்காமல் உண்ணுவது...அதை நமக்கு பரிமாறும் பொழுதே நம்மால் எவ்வளவு உண்ண முடியுமோ அதை மட்டும் வாங்கி கொள்வது...


இந்த பதிவை நான் எழுத தூண்டுதலாக இருந்ததும் என் அலுவலகத்தில் இருந்த இன்னொரு அறிவிப்பு பலகை...இன்று தான் அந்த பலகையை கவனித்தேன்...அதில் ஒரு நாளைக்கு என் அலுவலக காண்டீனில் வீணாகும் உணவின் மொத்த மதிப்பு கணக்கிடப்பட்டிருந்தது .....இந்த மதிப்பு மொத்தம் 13000 ரூபாய்...எனக்கு தலை சுற்றி போனது....அட ஆண்டவா!!!! என்று என் உடன் வந்த தோழியிடம் புலம்பி கொண்டே வந்தேன்....



எனக்கு எல்லா சமயத்திலும் நண்பர்கள் உண்டு...நாம் உண்ணும் ஒவ்வொரு அரிசியிலும் அல்லா நம் பெயரை எழுதியிருப்பார் என்று என் இஸ்லாமிய தோழி கூற கேட்டிருக்கிறேன்...அப்படியானால்,நமக்காக கடவுள் கொடுத்த ஒன்றை நாம் நிராகரிப்பதாக தானே பொருள்..அது இறைவனின் அன்பை நாம் நிராகரிப்பதற்கு சமம் தானே...



காந்திஜி தான் சாப்பிட உட்காரும் பொழுது ஒரு ஊசி,ஒரு டம்ளர் தண்ணி எடுத்து கொண்டு போய் வைத்து கொள்வாராம்...சாப்பிட்டு முடித்த பின் சிந்திய உணவை ஊசியில் எடுத்து டம்ளர் தண்ணீரில் கழுவி சாப்பிடுவாராம்...(அதுனால தான் அவர நாம மகாத்மா னு சொல்றோம்....என்ன சரிதானே??)
அதற்காக உங்கள நான் மகாத்மா ரேஞ்சுக்கு இருக்க சொல்லல.....உங்களுக்கு னு பரிமாறுகிற உணவை வீணாகாம பார்த்துக்குங்க...அது போதும்....


அடுத்த முறை உணவை வீணாக்கும் முன் நைஜிரியாவையோ,மங்கோலியா வையோ நினைத்து பார்த்து கொள்ளுங்கள்.....ஒரு நாடே பசியில வாடுறது உங்க நினைவுக்கு வரும்... கண்டிப்பா உணவை வீணாக்க மாட்டிங்க !!!!!!

Sunday, June 22, 2008

FAQS ஆன் தசாவதாரம்

ஒரு வழியா தசாவதாரம் பார்த்தாச்சு.........

ஜூன் 6 ஆம் தேதியிலிருந்து படம் பார்த்துட்டேன் னு சொன்ன எல்லார்கிட்டயும் நான் கேட்டு கொண்டிருந்த கேள்விகள் சிலவற்றிற்கு இதோ பதில்கள் :

1) படத்துல உண்மையிலேயே 10 வேடங்களா?
ஆமாம்.படத்தில் 10 வேடங்கள் தான்.ஆனால் நம்பி மற்றும் கோவிந்த் வேடங்களுக்கு மேக்கப் அவ்வளவாக தேவைப்படவில்லை...

2) படத்தின் ஹீரோயின் கள் பற்றி...?
மல்லிகா - வில்லனின் மனைவியாக வருகிறார்...அநியாயத்திற்கு கெட்டவராக இருக்கிறார்...
அசின் - வழக்கம் போல துறுதுறு வென்று அசத்துகிறார்...முகுந்தா பாடல் தவிர வேறு பாடல்கள் இல்லை...முக்கியமாக டூயட் இல்லை...தமிழ் சினிமா விதிமுறைகள் உடைக்க பட்டு விட்டன...!!!
3)படத்தின் பாடல்கள்???
ஒ சனம் பாடல் துள்ளலாகவும்,அசத்தலாகவும் இருக்கிறது...
கல்லை மட்டும் பாடல் நிறைய சிந்திக்க வைக்கின்றது...
முகுந்தா பாடல் மோர் ஆப் எ சாமி பாட்டு...ஆனால் மற்ற பாடல்களை விட எனக்கு இந்த பாடல் பிடித்தது....லிரிக்ஸ் வாலி அன்றோ!!!
உலக நாயகன் பாடல் உண்மையாகவே உலக நாயகனுக்கு ஓர் அர்ப்பணம்....

4)படத்தில் வரும் வேடங்கள் பற்றி???
படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது...ஜப்பானீ வேடம் தான்...அழகான கமலை அசிங்கமாக காட்டியிருந்த பூவராகன் வேடமும் அருமை...கிருஷ்ணவேணி பாட்டி வேடமும் கமல் என்று நம்ப முடியவில்லை...பிலேட்சேர் கண்களை வைத்து கமல் என்று கண்டுகொள்ள முடிந்தது...புஷ் நடை சூப்பர்....அந்த முஸ்லீம் வாலிபனாக வரும் கமலுக்கு உயரத்தை எப்படி அதிகமாகினார்கள் என்று சொன்னால் நல்ல இருக்கும்...பலராம் வேடம் பாலைய்யாவை நினைவு படுத்தியது...ரெங்கராஜ நம்பி வேடம் கம்பிரமாக இருந்தது...அவதார் சிங் வேடத்தில் கலக்கலாக சிங் போலவே இருக்கிறார்...கோவிந்த் வேடத்திற்கு தான் அதிகமாக கஷ்ட பட்டிருக்க வேண்டும்!!..அனைத்து கேரக்டேர் களும் அருமை.....படத்தை கமலுக்காகவே ரெண்டு மூணு தடவை பார்க்கலாம்...

5)படம் புரியுதா???
ஒ...நல்லாவே புரியுதே...chaos theory,butterfly effect எல்லாம் சொல்லியிருக்கார்...ஆனாலும்..படம் புரியுது....

6)so,படம் சூப்பர் ஹிட் தானா??? :)))))))))))))
ஹிம்ம்ம்ம்ம்...கண்டிப்பா....சுப்பர்ரோ சூப்பர் ஹிட்.....சந்தேகமே வேண்டாம்....

இதனால் சகலமானவர்களுக்கும் நான் தெரிவித்துகொள்வது என்னெவென்றால்.....தயவு செஞ்சு இந்த படத்த பாத்துருங்க.....ப்ளீஸ்....
:))))))))))

Wednesday, June 18, 2008

குட் சாட்அவார்ட் ...


ஆபீஸ் வந்ததும் ப்ளாக் ஐ பார்த்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது....

இல்லதரசியிடமிருந்தது ஒரு அவார்ட் வந்திருந்தது...

குட் சாட்அவார்ட் ...

மிக்க நன்றி இல்லத்தரசி...

இனி நான் இந்த அவார்டை வேறு முன்று பிளாக்கர்களுக்கு கொடுக்க வேண்டுமாம்...

சரி,கொடுத்துடுவோம்!!!!

முதல் அவார்ட் கோஸ் டு இல்லத்தரசி....நல்ல சமையல் மேனுகளை ப்ளாகில் போட்டோவுடன் போட்டு அசத்திவருவதால் என் போன்ற பலரும் அதை பார்த்தே பசி மறக்க உதவுவதால் இந்த அவார்ட்!!!

செகண்ட் அவார்ட் கோஸ் டு சு ஹிஸ் ப்ரைன்வவேஸ்...தன் மகனை பற்றி அழகாகவும்,சுவாரஸ்யமாகவும் எழுதி வருவதால் இந்த அவார்ட்!!!

மூன்றாவது அவார்ட்....நான் ப்ளாக் தொடங்கிய நாள் முதலே என் ப்ளாக் குகளை தவறாமல் படிக்கும் அன்பு அண்ணன் வடக்குபட்டு ராமசாமிக்கு....(என்ன சத்யா ....ஓகே தான??)...

இந்தாங்க உங்க அவார்ட்...எடுத்துக்குங்க.. :))))))))))))))))





Tuesday, June 17, 2008

வீக் என்ட்

"so wats up for the weekend?"

நீங்க ஐ.டி துறையில வேலை பார்ப்பவராக இருந்தால் வெள்ளி கிழமைகளில் இந்த கேள்வியிலிருந்து நீங்க தப்பவே முடியாது...

போன வாரம் ஊருக்கு போகும்போது ரயிலில் என் உடன் பயணம் செய்த இரு பெரியவர்கள் பேசிகொண்டிருந்தது என்னை ரொம்பவே யோசிக்க வைத்தது...

நான் ஐ.டி யில் வேலை பார்ப்பவள் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை போலும்...ஐ.டி யில் வேலை செய்யும் மக்கள் எல்லோரையும் சகட்டு மேனிக்கு வாரிகொண்டிருந்தார்கள்.....எனக்கே கொஞ்சம் சங்கடமாக தான் இருந்தது....

வெள்ளி கிழமை கேளிக்கைகள் என்கிற பெயரில் நம்மில் சிலர் செய்யும் தவறால் இந்த துறையில் இருக்கும் அனைவர் மீதும் பொத்தாம் போக்காக குறை சொல்வது சரியல்ல....

உதாரணத்திற்கு,என் நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள்...இந்தியாவில் பெரிதும் மதிக்க படும் ஒரு சாப்ட்வேர் நிறுவனம்....எங்கள் நிறுவனத்தில் சேவை மனம் கொண்டவர்களுக்காக ஒரு தனி இயக்கம் அமைக்க பட்டு நிறைய உதவிகள் செய்து வருகின்றனர்...அது மட்டுமல்லாது,பணியாளர்கள் ஆன நாங்களும் எங்களுக்குள் குழுக்கள் அமைத்து சேவை மனதுடன் செயல்பட்டு வருகிறோம் ... இது போன்ற நல்ல காரியங்களை செய்ய நாங்கள் எங்களது வார இறுதிகளை பயன்படுத்தி கொள்கிறோம்...போன வாரம் கூட ஓர் ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று வந்தோம்....இந்த துறையிலும் சில நல்லெண்ணம் கொண்டவர்கள் இருக்கிறோம் என்பதை இவர்கள் அறிவார்களா??

மிகவும் சிறிய வயதிலேயே இவர்களுக்கு இவ்வளவு சம்பளம்!!ஆதலால் தான் கண்முன் தெரியாமல் ஆடுகிறார்கள் என்று கூறும் இவர்களால்,இந்த துறையில் இருப்பவர்களின் மன உளைச்சலை உணர முடியுமா என்பது ஒரு கேள்வி குறியே!!!

எங்களில் சிலர் செய்யும் தவறுக்காக எல்லாரையும் குறை கூறுவது தவறான விஷயம்....

சாப்ட்வேர் நிறுவனத்தில் இருக்கும் பலரும் வெளியூரில் இருந்து வந்து வேலை பார்ப்பவர்கள் தான்...அப்படி இருக்கறப்போ வார இறுதிகளில் எல்லாம் ஊருக்கு போகவே விரும்புகிறோம்...அதுவும் என்னெல்லாம் பார்த்திங்கன்னா ஒரு நாளைக்கு 11 மணி நேரம் அலுவலகத்தில் இருக்கேன்...அப்படி இருக்குறப்போ வார இறுதி ல தான் நமக்காக கொஞ்ச நேரம் எடுத்துகிட்டு நமக்கு பிடிச்ச விஷயங்கள் செய்ய முடியும்...உதாரணத்துக்கு பிடித்த புத்தகங்கள் படிக்கிறது,பாடல்கள் கேட்குறது,கோவில்களுக்கு செல்வது மாதிரி ஏதாவது...மனசுக்கு சந்தோஷம் தரக்கூடிய விஷயங்கள்...

இதெல்லாம் மறந்துட்டு சும்மா அர்த்தமில்லாம எல்லாரையும் குறை கூறுவது சரியல்ல....

இனிமே, "ஐ.டி பசங்க ரொம்ப மோசம்ப்பா" னு சொல்றதுக்கு முன்னாடி நீங்க என்ன பண்றிங்க வார இறுதிகள்ள கொஞ்சம் யோசிச்சு பார்த்துக்குங்க.....!!

Monday, June 9, 2008

கோபம் கொள்ளாதே...

இந்த கோபம் இருக்கே...ஐயோ...மனுசன உண்டு இல்ல னு ஆக்கிடும்..
எல்லாருக்கும் கோபம் ங்கறது தவிர்க்க முடியாதது...ஆனா அது அர்த்தமுள்ளதா இருக்குறது அவசியம்..அது யாருமேல,எப்போ,எதுக்காக வருதுங்க்றதும் முக்கியம்...
சரி,முதல்ல நாம ஏன் கொபிச்சுகுறோம் னு யோசிங்க?!கோபம் என்பது முக்கால்வாசி நேரம் நாம் எதிர்பார்த்தது,எதிர்பார்த்த விதத்தில் நடைபெறாமல் போவதால் ஏற்படுவது....ஒரு சின்ன மாறுதலுக்கு எதிர்பார்ப்பே இல்லாமல் இருந்து பாருங்களேன்..அதே போல ஒரு காரியமோ,விஷயமோ 100 சதவிகிதம் சரியாக இருக்கணும் னு நினைக்குறதும்,கோபத்தை ஏற்படுத்தும்...இது போன்றவர்களை ஆங்கிலத்தில் "Perfectionist" என்று சொல்லுவோம்...இவர்கள் எப்போதும் ஒரு பரபரப்புடன் இருப்பதை நம்மால் உணர முடியும்...இது அவர்களை மட்டுமல்லாது அவர்களை சுற்றி இருப்பவர்களையும் வெகுவாக பாதிக்கிறது..
சரி,கோபத்தை கட்டுப்படுத்த சில வழிகள்...
1) மிகவும் கோபமாக இருக்கும் போது,சுற்றி இருப்பவர்களிடம் பேசாமலிருப்பது உத்தமம்..மிறி பேசினால் வம்பு தான்...
2)கோபமாக இருக்கும்போது தனிமையில் இருப்பதை தவிர்க்கவும்...
3)உங்களுக்கு பிடித்த நல்ல இசை கேட்கலாம்....அவை மெல்லிசையாக இருத்தல் நலம்!!
4)புகைபிடிப்பதோ,மது அருந்துவதோ கோபத்தை தீர்க்காது.....
5)கோபம் சற்று குறைந்த வுடன்,பிடித்தமானவர்களுக்கோ,நெருக்கமானவர்களுக்கோ போன் போட்டு பேசலாம்...அவர்களிடம் உங்களுக்கு செவி சாய்க்கும் அளவுக்கு நேரம் இருக்கிறதா என்பதை முதலில் யோசித்து கொள்ளுங்கள்...
6)எந்த ஒரு காரியத்திலும் நீங்கள் முழு மனதுடன் உவந்து செய்தாலே போதும்...இது கண்டிப்பா நடந்து விட வேண்டும் என்று எண்ணுவது தவறல்ல...ஆனால் அதுவே உங்கள் நிம்மதியை குலைத்துவிட கூடாது!!
7)பொதுவாகவே உணவில் அதிக காரம்,உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும்...
8)நிறைய பழங்கள் சாப்பிடுவதை வாடிக்கை ஆக்கி கொள்ளுங்கள்..
9)எப்போதும் ஆரோக்கியமான சிந்தனைகளை வைத்து கொள்ளுங்கள்...
10)தியானம் செய்ய பழகுங்கள்!!
()

Friday, June 6, 2008

தடங்கலுக்கு வருந்துகிறேன் ...

வேலையில ஏற்பட்ட சில மாறுதல் களால் தமிழினி மைசூர் வரவேண்டியதா போயிடுச்சு...சொந்த கணினியும் கையில் இல்லை..வேலை பழுவும் கொஞ்சம் அதிகம்...
ஆதலால் ஒரு சிறிய இடைவேளை வந்து விட்டது..
தடங்கலுக்கு வருந்துகிறேன்...
ஆனால் இனி மீண்டும் என் எண்ணங்கள் இங்கு எழுத்தாக உரு பெறும்...
பில்லா போல் சொல்ல வேண்டுமானால் "I AM BACK"..
விரைவில் பதிவுகளுடன் உங்களை சந்திக்கிறேன் ....

:)))

Saturday, March 1, 2008

சுஜாதா என்கிற சகாப்த்தம்

28 ஆம் தேதி வழக்கம் போல காலைல பேப்பர் படிச்சுட்டு இருந்தேன் .....
"Prolific Writer Sujatha Passes away" னு இருந்தது...
கண்கள ஒருதடவ நல்லா தேச்சுட்டு திரும்ப படிச்சேன்.....
"Prolific Writer Sujatha Passes away" ......அட கடவுளே....இது என்ன...ஒரு அரைமணி நேரத்துக்கு எதுவுமே செய்ய முடியாம ஆயிடுச்சு....
எனக்கு எழுத்தார்வம் வந்ததுக்கும்,பத்திரிக்கைகள் படிக்க ஆரம்பிச்துக்கும் பிள்ளையார் சுழி போட்டதே ...அவருடைய எழுத்துக்கள் தாம்...

இனிமே அந்த மாதிரி ஒரு எழுத்தாளர் நமக்கு கிடைப்பாங்களா ங்கறது ரொம்ப பெரிய சந்தேகம் தான்....
சுஜாதா வ ஒரு முறை நேர்ல பார்த்துருக்கேன் ...ரொம்ப எளிமையா இருந்தாரு...வோடிங் மிஷன் கண்டு பிடித்த பெருமைக்கு உரியவர்...
இனிமே ஒவ்வொரு முறை ஆனந்த விகடன் படிக்கும் போதும்,அவரை ஒரு முறை நெனச்சு பார்த்துக்குவேன்....
சுஜாதா,நீங்கள் இல்லாத குறை தீர்க்க உங்களது படைப்புகளில் ஆறுதல் தேடுகிறேன் ....

கீழே இருப்பவை சுஜாதா இளம் தலைமுறையினருக்காக சொன்ன பத்து கட்டளைகள்

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.
7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

சுஜாதா, உங்கள ரொம்ப miss பண்றோம்.... :((

Sunday, January 20, 2008

எப்படி இருக்கீங்க...

பொதுவா நான் யாரையாவது கொஞ்ச நாள் பார்க்காம இருந்துட்டு,திடீர் னு ஒரு நாள் சந்திச்சா அவங்கள்ட்ட பேச ஆரம்பிக்கறதுக்கு மட்டும் தான் இந்த வாக்கியத்தை பயன்படுத்துவேன்....

ஆனா இந்த வாக்கியத்துக்கு எவ்வளவு மதிப்பு இருக்கு னு நான் நேத்து தான் தெரிஞ்சுகிட்டேன் .....

பொதுவா,உடம்பு சரியில்லாம இருக்குறது ஒரு கொடுமைனா,உடல் நலம் சரியில்லாம இருக்கும்போது,தனியா இருக்குறது இருக்கு பாருங்க ........................ஐயோ,அது ரொம்ப பெரிய கொடுமை .....


போன வார முடிவு ல எனக்கு அதான் ஆச்சு......ஆபிஸ்-லயே கொஞ்ச முடியல...சரின்னு அனுமதி கேட்டுட்டு வீட்டுக்கு வந்தா வீட்டுலயும் ஒருத்தரும் இல்லே .....

சரின்னு ஊருக்கு போன் போட்டேன் ...உடம்பு சரியில்ல னு போலம்பிட்டு தூங்கிட்டேன் ....சாயுங்காலம் அம்மா கிட்டருந்து போன்......

" என்னமா.............எப்படி இருக்க ......இப்போ ......"--அப்படின்னு அவங்க கேட்டதே எனக்கு பாதி காய்ச்சல் போன மாதிரி ஆயிடுச்சு ....


இந்த வாக்கியத்துக்கு இவ்வளவு சக்தியா னு .......நானே யோசிச்சு பார்த்துக்கிட்டேன்....அந்த வாக்கியத்துக்கு பாதி சக்தினா,அத கேட்ட உறவு க்கு (அம்மா) இருக்குற சக்தி-யப்பத்தி ...நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்ல ....


நம்ம மேல உண்மையான அன்பு வச்சுருக்குற ஒருத்தங்க வாயிலருந்து வர்ற வார்த்தைகள் எல்லாமே நமக்கு குறள் மாதிரி தானே ......

இப்ப சொல்லுங்க ..... "எப்படி இருக்கீங்க .........."(இனிமே இந்த வார்த்தைய அதன் அர்த்தத்தையும்,ஆழத்தையும் தெரிஞ்சு பயன்படுத்த போறேன்.....)