Sunday, January 20, 2008

எப்படி இருக்கீங்க...

பொதுவா நான் யாரையாவது கொஞ்ச நாள் பார்க்காம இருந்துட்டு,திடீர் னு ஒரு நாள் சந்திச்சா அவங்கள்ட்ட பேச ஆரம்பிக்கறதுக்கு மட்டும் தான் இந்த வாக்கியத்தை பயன்படுத்துவேன்....

ஆனா இந்த வாக்கியத்துக்கு எவ்வளவு மதிப்பு இருக்கு னு நான் நேத்து தான் தெரிஞ்சுகிட்டேன் .....

பொதுவா,உடம்பு சரியில்லாம இருக்குறது ஒரு கொடுமைனா,உடல் நலம் சரியில்லாம இருக்கும்போது,தனியா இருக்குறது இருக்கு பாருங்க ........................ஐயோ,அது ரொம்ப பெரிய கொடுமை .....


போன வார முடிவு ல எனக்கு அதான் ஆச்சு......ஆபிஸ்-லயே கொஞ்ச முடியல...சரின்னு அனுமதி கேட்டுட்டு வீட்டுக்கு வந்தா வீட்டுலயும் ஒருத்தரும் இல்லே .....

சரின்னு ஊருக்கு போன் போட்டேன் ...உடம்பு சரியில்ல னு போலம்பிட்டு தூங்கிட்டேன் ....சாயுங்காலம் அம்மா கிட்டருந்து போன்......

" என்னமா.............எப்படி இருக்க ......இப்போ ......"--அப்படின்னு அவங்க கேட்டதே எனக்கு பாதி காய்ச்சல் போன மாதிரி ஆயிடுச்சு ....


இந்த வாக்கியத்துக்கு இவ்வளவு சக்தியா னு .......நானே யோசிச்சு பார்த்துக்கிட்டேன்....அந்த வாக்கியத்துக்கு பாதி சக்தினா,அத கேட்ட உறவு க்கு (அம்மா) இருக்குற சக்தி-யப்பத்தி ...நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்ல ....


நம்ம மேல உண்மையான அன்பு வச்சுருக்குற ஒருத்தங்க வாயிலருந்து வர்ற வார்த்தைகள் எல்லாமே நமக்கு குறள் மாதிரி தானே ......

இப்ப சொல்லுங்க ..... "எப்படி இருக்கீங்க .........."(இனிமே இந்த வார்த்தைய அதன் அர்த்தத்தையும்,ஆழத்தையும் தெரிஞ்சு பயன்படுத்த போறேன்.....)

2 comments:

Sathiya said...

ரொம்ப நல்லா இருக்கேங்கம்மணி! நீங்க சொன்னது மாதிரி தனியா இருக்கும் போது ஒடம்புக்கு ஏதாச்சும் வர்றது ரொம்ப கொடுமைங்க. ஒரு காபி வச்சு தர கூட ஆள் இல்லாம நானும் கஷ்ட பட்டு இருக்கேன். என்னடா வாழ்க்கை இதுன்னு தோணும். உங்களுக்கு சரி அயிடுச்சா? ஆமா நீங்க படிச்சி முடிச்சி வேலைக்கு போக அரமிச்சிட்டீங்களா? சொல்லவே இல்ல;)

MSK / Saravana said...

எப்படி இருக்கீங்க தமிழினி??
:)