Sunday, September 2, 2007

அழகிய திருச்சி ந்கரினிலே....

நான் பிறந்தது சிங்கார சென்னை என்றாலும், என்னோட முன்றாவது வயசுலயே நாங்க குடும்பத்தோட திருச்சி போயிட்டோம்.
திருச்சி பத்தி ஒன்றுமே தெரியாதவங்களுக்காக தான் இந்த பதிவு :
1)திருச்சி னாலே முதல்ல நம் ஞாபகத்துக்கு வரது மலைக்கோட்டை தான்.
நான் முதல்ல தடவ போன போது,என்னை ரொம்ப கவர்ந்தது தாயுமானவர் சன்னதி தான்.அங்க நந்தி சிலைக்கு பின்னாலே ஒரு இடம் இருக்கும்.அங்க நின்னு சாமி பாக்குறது ஒரு தனி சந்தோஷம்.நான் அடிக்கடி போற கோயில் மலைக்கோட்டை தான்.அதே போல திருச்சி லே இருக்குற ஒவ்வொரு கோயிலுமே ரொம்ப ஸ்பெஷல் தான்.திருவரங்கம் ரங்கநாதர் கோயில்,சமயபுரம் மாரியம்மன் கோயில்,தென்னூர் நாச்சியார் கோயில்,வெக்காளி அம்மன் கோயில்,திருவானைக்காவல்,வயலூர் முருகன் கோயில்,கல்லுகுழி ஆஞ்சநேயர் கோயில் இன்னும் பல....
2)காவேரி தண்ணி.அதுவும் 24மணி நேரமும்.
3)கோயமுத்தூர் பிஸினஸ் சென்ட்டர் னா திருச்சி எஜுகேஷன் சென்டர்.நிறைய பள்ளி,கல்லூரிகள் இருக்கு.NIT (National Institute of Technology) யும்,கி.ஆ.பெ மருத்துவ கல்லூரி யும் கூட இருக்கு.
4)பேருந்து வசதி: சென்னை ல் இருக்குறதெல்லாம் பேருந்தா??திருச்சி ல போய் பாருஙக.........சும்மா சூப்பரா இருக்கும்.ட்ராபிக் குட கம்மி தான்.....சென்னை ல மழை பெய்யும் போது பேருந்து குள்ள இருந்தா தான் நனைந்து போறோம்.திருச்சி ப்ரைவேட் பஸ் களும் இருக்குற்தால போட்டி போட்டு வசதி பண்ணி வச்சிருப்பாங்க!!
5)தமிழ்நாட்டோட மத்தி ல இருக்குறதால தொழில் தொடங்க இது ஒரு நல்ல ஊர்.ரயில்வே ஜங்ஷன் இருக்கு.....அது தவிர 2 பெரிய பஸ் ஸ்டாண்ட் இருக்கு....!!!
6)திருவரங்கத்து அரவணை,அசோகா ஸ்வீட்- இனிப்புகள் இது ரெண்டு மே திருச்சி யோட ஸ்பெஷல் லான இனிப்பு வகைகள்.திருவரங்கன் கோயிலுக்குள்ள கிடைக்கும்.
எல்லாத்தையும் விட,எங்க மக்கள் அன்பானவங்க....................நாங்களெல்லாம் நல்லவங்க!!!!!!!

2 comments:

Sathiya said...

நீங்க என்ன சொன்னாலும் நம்புவோம்...நாங்களும் நல்லவங்க தான்;)

Unknown said...

திருச்சி வெயில்??? :-)